ஷாப்பிங்ஙா? வார்னிங்.. மைண்ட் இட்

இந்த வலைப்பூவில் வரும் சம்பவங்கள் காட்சிகள் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மையே.. இது மற்றவர்களை புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை.. ஒரு வேளை அப்படி இருந்தால் அது உண்மையே.. இந்த வலைப்பூவை படிப்பதன் மூலம், ... உங்களின் அறிவு மூளை எழுத்தாற்றல் நகைகள் ஏதேனும் தொலைந்து போனாலோ களவாடப்பட்டாலோ அதற்கு தொகுப்பர் பொறுப்பில்லை


Wednesday, 13 April 2011

கார்த்தியும், நாலஞ்சு பெண்களும் : பகுதி-1


அருண்: மச்சி உன்ன ஏன்டா எந்த பொண்ணும் நம்ப கிளாஸ்ல மதிக்க மாட்டேங்றாங்க?

கார்த்திக்: டேய்.. இத தான் அவ்வையார் அன்னிக்கே சொல்லி வச்சாங்க..  கழுதைக்கு தெரியுமா கார்த்தியோட யோசனைன்னு..

அருண்: அப்றோம் ஏன்டா என்கூட மட்டும் நல்ல பேசுறாங்க?

கார்த்திக்: அத கூட அவ்வையார் சொல்லிருக்காங்கடா.. அஞ்சு பைசா பெருமானமில்லாத சீன அஞ்சு ஊருக்கும் தெரியும்படி அஞ்சு மணீ நேரம் போடுவாங்களாம் அருண வச்சு..

அருண்: கொய்யால.. நான் உன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்றேன்.. ஆனா நீ என்கிட்ட ஒண்ணுத்தையும் சொல்ல மாட்ற..

கார்த்திக்: என்ன மச்சி இப்டி சொல்ட?

அருண்: ரகசியமாவே எல்லா காரியமும் பண்ற.. டேய்.. நீ யாரையோ லவ் பண்றன்னு நினைக்கிறேன்..

கார்த்திக்: மச்சி.. சத்யமா இல்லடா..

அருண்: பொய் சொல்லாதடா.. சத்யபாமா காலேஜ் பிகராட உன்ன சத்யம் தியேட்டர்ல விஷால் படம் சத்யம் பாக்கும் போது, நம்ப இ.சி.இ சத்யமூர்த்தி பார்த்ததா ஒரு நியூஸ் உலா வருது..

கார்த்திக்: பசி, பஞ்சம், பட்டினி உன்ன இப்டி எல்லாம் பேசவைக்குதுடா.. மெஸ்ல சாப்பாடுக்கு டைம் ஆச்சு.. வா போலாம்..

அருண்: எனக்கு இன்னொரு சந்தேகம்.. பரிசோதனை எலி கேள்விபட்டுருக்கியா?

கார்த்திக்: டிச்கவேரி சேனல்ல காட்டுவாங்களே.. அதானே?

அருண்: ஆமாடா.. அதே தான்... அது மாதிரி நீ என்ன யூஸ் பண்ணி, ஐடியா கிளிக் ஆச்சுன்னா, அத நீ உன் காதல்ல யூஸ் பண்ணிக்கலாம்ன்னு இருக்க.. கரெக்ட்?

கார்த்திக்: என்னடா ஆச்சு உனக்கு? இன்னிக்கு உளறிட்டே இருக்க? நா யாரையும் லவ் பண்ணலடா.. நம்புடா..

அருண்: முடியாது.. எனக்கொரு உண்மை தெரிஞ்சு ஆகணும் சாமி..

..........

அருண்: அனுஷா உன்கூட சேராத, அவன் கொஞ்சம் மோசமான பையன்னு சொல்றா..

கார்த்திக்: அசிங்க படுத்திட்டா..

அருண்: கிருத்திகா இவன் கூட எல்லாம் எப்டி நட்பு வச்சிருக்கன்னு கேக்குறா..

கார்த்திக்: கேவல படுத்திட்டா..

அருண்: ஆர்த்தி கிளாஸ்ல எனக்கு பிடிக்காத முதல் பையன் கார்த்தி தான்னு சொல்டா

கார்த்திக்: அவமான படுத்திட்டா..

அருண்: மோனிகா இவன பார்த்தாலே எரிச்சலா இருக்குன்னு சொல்டா..

கார்த்திக்: மதிக்காம போய்டா..

அருண்: வேதிகா இவன் கூட பழகுறதே பாவம்னு சொல்டா

கார்த்திக்: வேடிக்கையா பேசிட்டா..

அருண்: டேய்.. இங்க என்ன எதுகை மோனை பட்டிமன்றமா நடக்குது?

கார்த்திக்: அதான் கிளாஸ்ல இருக்குற ஒட்டுமொத்த பொண்ணுங்களும் பிடிக்கலன்னு சொல்றாங்க.. மொத்தமா Declare பண்றத விட்டுட்டு Individuala declare பண்ணி Memory வேஸ்ட் பண்ற?

அருண்: என் இவங்க இப்டி பேசுறாங்க?

...

அருண்: உனக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சன?

..

அருண்: காலேஜ் ஆரம்பிச்சு 2 Months அப்றோம் தான் நாம பேச ஆரம்பிச்சோம்..

..

அருண்: அதுக்கு முன்னாடி நீ என்ன பண்ணிட்டு இருந்த?


(எக்கோ)

சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க

சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க

சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க..


**********************

கல்லூரி தொடங்கிய முதல் நாள், அனைவரும் Introduction Sessionனில் தங்கள் பெயர், பள்ளி, ஹாபீஸ் என்று மொக்கை தனமாக சொல்கின்றனர்.. நம்ப கார்த்திக்கை ஈர்த்த பெண் இவள்..

கார்த்திக்: வேதிகா வர்மா.. ஹிந்தி பொண்ணா இருக்கும் போல.. வெள்ள வெளேர்னு இருக்கா.. முதல்ல இவள தான் கரெக்ட் பண்ணனும்

பக்கத்தில் இருக்கும் பையனிடம் கார்த்தி பேச்சு கொடுக்க..

கார்த்தி

ரமேஷ்

கார்த்திக்: ஹிந்தி தெரியுமா?

ரமேஷ்: மாலும்.. எதுக்கு?

கார்த்திக்: மச்சி.. உன் பெயர் என்ன? இத ஹிந்தில எப்டி சொல்றது?

ரமேஷ்: ஏன்டா?

கார்த்திக்: அந்த ப்லு சுடிதார் பொண்ண பிடிச்சிருக்கு..  ஹிந்தி பொண்ணா இருக்கும் போல.. அப்டியே கரெக்ட் பண்ணிடலாமேனு..

ரமேஷ்: ஹிந்தில பேசுனா கரெக்ட் ஆகிடுமா?

கார்த்திக்: மச்சி இப்போ ஒரு கூட்டத்துல 20 பேரு இருக்காங்கன்னா, அதுல தமிழ் பேசுற ஆளுங்க கூட தானே நாம ஈர்க்க படுறோம்.. BE A ROMAN WHEN YOU ARE IN ROME சொல்லிருக்காங்கடா.. So, ஹிந்தி பேசுற பையன்னா அவளுக்கு Extra Attraction இருக்கும்..

ரமேஷ்: நண்பா.. இன்னிக்கு சொல்றேன்.. இந்த கிளாஸ்ல மட்டும் இல்ல, இந்த காலேஜ்லேயே நீ பெரிய ஆளா வருவடா.. Genius da.. ஹ்ம்ம்ம்.. சுக்ரியா க்யா கேளு..

கார்த்திக்: அப்டின்னா?

ரமேஷ்: பேரு சொல்லுங்கன்னு அர்த்தம்டா..

மாலை, கல்லூரி பேருந்தில் கார்த்தி, அதே பேருந்தில் வேதிகா..

கார்த்திக்: Confidence மச்சி Confidence


கார்த்திக் வேதிகா அமர்ந்த இடத்தின் பக்கத்தில் அமர்ந்தான்..

மெதுவாக

கார்த்திக்: சுக்ரியா சுக்ரியா?

வேதிகா திரும்பவில்லை..

கொஞ்சம் சத்தமாக

கார்த்திக்: சுக்ரியா சுக்ரியா..

அவள் அவனை ஒரு பார்வை பார்த்து திரும்பி கொள்கிறாள்..

கொஞ்சம் சத்தமாக,

கார்த்திக்: காது கேக்காது போல.. சுக்ரியா சுக்ரியா சுகிர்யாயாயாயாயா..

வேதிகா: டேய்.. லூசா நீ? எனக்கு காது கேக்கும்.. நீ கொஞ்சம் சுருக்குரியா?


**********************

LAB

மோனிகா,கார்த்திக் பக்கத்துக்கு பக்கத்துக்கு இருக்கையில்.. கார்த்திக் மோனிகா என்ன செய்கிறாள் என்று எட்டி பார்க்க, MATRIMONIAL WEB SITE பார்த்து கொண்டுருக்கிறாள்..

கார்த்திக் 2 ரமேஷ்: மோனிகா MATRIMONIAL வெப்-சைட் ஓபன் பண்ணி வச்சிருந்தா..

ரமேஷ் 2 சந்தியா: மோனி MATRI வெப்-சைட்ல பார்த்துட்டு இருந்தாளாம்

சந்தியா 2 வினோத்: மோனி மேட்டர் வெப்-சைட் பார்த்தாளாம்

வினோத் 2 அபிராமி: மோனிக்கு வெப்-சைட்ல ஏதோ பாக்கும் போது மேட்டர் ஆகிடிச்சாம்

அபிராமி 2 திலிப்: மோனி வெப்-சைட் விஷயமா மேட்டர்ல மாட்டிகிட்டாலாம்.. என்னத்த பார்த்தா?

திலிப் 2 ஜெயஸ்ரீ: மோனி மேட்டர் ஒண்ணு வெப்-சைட்ல வந்துடிச்சாம்

ஜெயஸ்ரீ 2 மோனிகா: உனக்கு ஒருத்தன் கூட மேட்டர் ஆகிடிச்சாம்.. யாருடி அவன்?


இறுதியில் மோனிகா, கார்த்திக் தான் இந்த செய்தியை பரப்பி விட்டான் என்று அவனை அசிங்க அசிங்கமா திட்டி ஓய்கிறாள்

கார்த்திக்: இவ MATRIMONIAL வெப்-சைட் பார்த்தா தானே சொன்னேன்.. அதுக்கு எதுக்கு எனக்கு கல்யாணமே ஆகாதுன்னு சாபம் விட்ரா.. ஆனா ஒண்ணுடா .. MATRI-MONY எப்டிடா MATTER-MONInnu திரித்து சொன்னிங்க.. உங்க தமிழ் வாத்தியார் பெரும படுவாருடா...


அசிகங்கள் தொடரும்...


வருகைக்கு நன்றி!!

5 பேர் திருப்பி லொள்ளு, நக்கல் பண்ணிட்டாங்க:

creation said...

romba naalku aprom i liked ur post......very natural!!!!waiting for next one

கா.கி said...

boss, usual nakkal... kalakkunga.. aduttha script ready.. but character name karthick nu irundhadhu dhaan konjam idikkudhu :(

gils said...

awesome..after a long time had such a hearty laugh..amazingly original ...kalaku machi

Sarath said...

hehehehehehehe awesome na ;)

Tanya said...

Wow.. had an hearty laugh.. really ROFLMAO... karthik na udane thala thaan nyabagathuku vantharu.. aparam 2 lines padichathum thalaiku female fan irukume thavara critic irukathu.. so ithula namma thalai karthik ku samandham illana nu purinjidhu..